tamilpettai
Jan 16, 20211 min
தெய்வம் எனதருகில் இருப்பதை உணர்கிறேன்
என்தாய்மடிப்பற்றி துகிலவே தொடர்கிறேன்
வரம் தரும் வலிமை இருக்குதே உன்னிடம்
துகில் வரம் தருகிறாய் வருடியே என்னிடம்
பிடித்து போகுது உந்தன் இசை தாலாட்டு
படிகிறேன் உன்மடியில் முடிவிலா இசை கேட்டு
கனவிலே வருகிறாய் கலங்கரை விளக்கமாய்
துகில் மொத்தம் தருகிறாய் கருவறை அமைதியாய்
அறிகுறி கொள்கிறேன் திடிக்கிடும் துகில்கையில்
நிம்மதி பெறுகிறேன் உன் வாசனை நுகர்கையில்
தாலிசை நீளுது முழுநேர பகுதியாய்
உன் துகிலையே மறக்கிறாய் என்மீதான பாசம் மிகுதியால்
உணர்கிறேன் அம்மா உனதன்பை...................................................................