top of page

உணர்கிறேன் அம்மா உனதன்பை! - அம்மா கவிதை


ree

தெய்வம் எனதருகில் இருப்பதை உணர்கிறேன்

என்தாய்மடிப்பற்றி துகிலவே தொடர்கிறேன்


வரம் தரும் வலிமை இருக்குதே உன்னிடம்

துகில் வரம் தருகிறாய் வருடியே என்னிடம்


பிடித்து போகுது உந்தன் இசை தாலாட்டு

படிகிறேன் உன்மடியில் முடிவிலா இசை கேட்டு



ree

கனவிலே வருகிறாய் கலங்கரை விளக்கமாய்

துகில் மொத்தம் தருகிறாய் கருவறை அமைதியாய்


அறிகுறி கொள்கிறேன் திடிக்கிடும் துகில்கையில்

நிம்மதி பெறுகிறேன் உன் வாசனை நுகர்கையில்


தாலிசை நீளுது முழுநேர பகுதியாய்

உன் துகிலையே மறக்கிறாய் என்மீதான பாசம் மிகுதியால்


உணர்கிறேன் அம்மா உனதன்பை...................................................................

Commentaires


bottom of page