top of page

கவிதை - கடிதமொன்று எழுதத் தொடங்கியது இரவு!


ree

பிரிந்துவிட்ட காதலர்களாய்

இரவும் பகலும்!


அழுது சிவந்த கண்களே,

அந்தி செவ்வானமாய்,


நிலவில் மை தொட்டு

கரு வான காகிதத்தில்

கடிதமொன்று எழுதத் தொடங்கியது இரவு!


சிந்தித்து எழுதுகையில்

சிதறிய மைத்துளிகளே

நட்சத்திரங்களாய்!



விடிய விடிய யோசித்தும்

விளங்க வைக்கும்

வார்த்தை ஏதும் சிக்காததால்

இரவு வடித்த கண்ணீரே

பனித்துளிகளாய்!!

ree


சிப்பிக்குள் விழுந்த

மழைத் துளி முத்தாவது போல்

இரவு கண்ணீரின்

ஒரு துளி மட்டும்

வித்தாகிப் பின் விருட்சமானது!!


இரவின் புலம்பல்களை எல்லாம் - அது

பூக்களாய் பூக்கச்செய்தது

பகல் வந்து படிப்பதற்கு!!

ree


பகல் வந்து படித்துவிட்டு

போனதே தெரியாமல்

மீண்டும்

மீண்டும்

மடல் எழுதி கொண்டே இருக்கிறது

இரவு,

ree


மை தீர, தீர

நிரப்பி,நிரப்பி

வளர்பிறை,

தேய்பிறைகளாய்!!

Comments


bottom of page