top of page

காகிதப் பூக்கள் என் கவிதைகள்!


வெறும் காகிதப் பூக்கள்

என் கவிதைகள்!


உன் உதடுகளால்

உச்சரிக்கப்படும் போது

அவை வாசம் மட்டும் பெறுவதில்லை

சுவாசமும் பெறுகின்றன!!



கூட்டுப் புழுக்களாய் – என்

நோட்டுப் புத்தகத்தில்

உறங்கிக் கிடந்த

வார்த்தைகள் யாவும்

நீ வாசித்து போன பின்

வண்ணத்துப் பூச்சிகளாய்

பறக்கத் தொடங்கின

என் அறை முழுவதும்!!



கால் பட்டதால்

கல்லொன்று

உருப் பெற்ற கதை நானறிவேன்! – உன்

கண் பட்டதால்

சொல்லொன்று

உயிர் பெற்றதை அன்று முதலே அறிந்தேன்!!


13 views1 comment
bottom of page