top of page

நம்பிக்கை…வை - கவிதை


நம்பிக்கையில்தான்

நகருகிறது

வாழ்க்கை …!


உன்

நாடி ..நரம்புகளில்

இரத்தவோட்டத்தை

மாற்று…


இளமையாய்

நம்பிக்கையை

ஊற்று…


வறண்ட பொழுதினில்

வாழ்வின் எல்லைவரை

செல்லும் மனது …


அப்பொழுதினில்

நாளைய உலகினை

நம்பிக்கை வேர்களே

நன்றியுடன் உரைக்கும்



விடிவோம் என்றுதானே

வீழ்கிறான் சூரியன் …


வளர்வோம் என்றுதானே

தேய்கிறான் சந்திரன் …


வீழ்ச்சியும்…

தேய்தலும்…

தேகத்திற்குத்தான்..?

ஆனால்

மனதிற்கு …!


தவறெனில்

'தாய்' புவியின்

தலைவிதியை

மாற்றிவிடு …



'தரணி' ஆள

தளிர்களுக்கு

தன்னம்பிக்கை

ஊற்றிவிடு …


காயங்கள்

ஆறிவிடும்…

கவலைகள்

ஓடிவிடும்…


மாற்றங்கள்

துளிர்விடும் …

மறைவுகள்

உயிர்பெறும்…


மனித மனம்

என்று

ஒளிபெறும் …?


நாளைய

உலகினை

வழிநடத்த

வந்தவன்

நீ …!



நம்பிக்கை…வை


நம்பிக்கையில் தான்

நகருகிறது

வாழ்க்கை …!

16 views0 comments
bottom of page